search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Odisha Police"

    மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. #AshokChakra #OdishaPolice #PramodKumarSatpathy
    புதுடெல்லி:

    ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்புபடை உள்ளிட்டவற்றில் வீரதீர செயல்கள் புரிந்து, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு ‘அசோக சக்ரா’ விருது வழங்கப்படுகிறது.

    அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதிக்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இரவில் 500-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒடிசாவின் கன்ஜம் மாவட்டத்துக்குள் நுழைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகளை சூறையாடினர். இதில் 14 போலீசார் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

    அதன் பின்னர் மாவோயிஸ்டுகள் அனைவரும் அங்கு உள்ள காட்டுப்பகுதிக்குள் சென்று பதுங்கி கொண்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை உதவி ஆணையர் பிரமோத் குமார் சத்பதி, தன்னுடைய படை வீரர்களுடன் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்தார். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் பிரமோத் குமார் சத்பதி வீர மரணம் அடைந்தார்.

    அவருடைய ஒப்பற்ற தியாகத்தையும், வீரத்தையும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  #AshokChakra #OdishaPolice #PramodKumarSatpathy
    காவல் துறையினருக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா மாநிலத்தில் தீயணைப்பு படையினரின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று மூன்றாம் நாளை எட்டியது. #Firemenstrike #OdishaFiremenstrike
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் போலீசாருக்கு இணையான சம்பளம், ஏழாவது சம்பளக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்துதல், ஒப்பந்த பணியாளர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு பணி நிரந்தரம், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அம்மாநிலத்தில் உள்ள 341 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 24-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், தீயணைப்பு துறைக்கு வரும் அவசர அழைப்புகளை ஏற்பதற்கு யாருமில்லாததால் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நேற்று கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும், பலசோர் மாவட்டத்தின்பலியாபால் மற்றும் நய்கர் மாவட்டத்தின் டசப்பல்லா ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இரு தீவிபத்துகளால் ஏராளமான பொருட்கள் நாசமடைந்தன.

    இதைதொடர்ந்து, அவசர அழைப்பை ஏற்காமல் கடமையில் இருந்து தவறிய குற்றத்துக்காக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 6 பேரை பணியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்து மாநில தீயணைப்புத்துறை டி.ஜி.பி. பி.கே.ஷர்மா இன்று உத்தரவிட்டுள்ளார். #Firemenstrike #OdishaFiremenstrike
    ×