என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ilakkiya"

    • திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
    • பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் சூப்பர் சுப்பராயன். இவரின் மகனான திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இவர் தான் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

    நேற்று வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் ஹரி ஹர வீர மல்லு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர்தான். இந்நிலையில் இவர் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா அவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதனை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேரும் செய்துள்ளார்.

    அதில் அவர் " "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார்". இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற யூடியூபர் இலக்கியா போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்படுள்ளார். இச்செய்தி தற்பொழுது பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நடித்து வரும் மெகாத் தொடர் இலக்கியா.
    • இந்த தொடர் அக்டோபர் 10-ம் தேதி திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற சந்திரலேகா தொடர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து அக்டோபர் 10-ம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு தினமும் இலக்கியா மெகாத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த மெகாத் தொடரின் கதையை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

    இதில் ரூபஸ்ரீ, நந்தன், ஹீமாபிந்து, சுஷ்மா, டெல்லிகணேஷ், சதிஷ், பரத்கல்யாண், ராணி, காயத்ரிப்ரியா, மீனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சரிகம இண்டியா லிமிட் சார்பாக பி.ஆர். விஜயலட்சுமி தயாரிக்கும் இந்த தொடரை சாய் மருது இயக்குகிறார். இதன் கதையை சரிகம கதை இலாகாவும், திரைக்கதையை சேக்கிழார் எழுத, வசனத்தை குரு சம்பத்குமார் எழுதுகிறார்.

    இலக்கியா மெகாத் தொடர்

    இலக்கியா மெகாத் தொடர்

     

    தந்தை கைவிட்டுப் போன நிலையில் இலக்கியாவின் குடும்பம் தாய்மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அத்தை சிந்தாமணி எப்போதும் அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருப்பாள். சிறு வயதில் தங்களை காப்பாற்றிய தாய்மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறாள், தான் பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள். இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறாள். கதையின் நாயகன் கெளதம் பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சனை செய்கிறாள். நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.

    இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப் பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறாள். அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்றப் போகிறாள் என்பதை இலக்கியா மெகாத் தொடர் விளக்குகிறது. 

    ×