search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engu Sendrai En Uyire"

    ஆர்.வி.பாண்டி இயக்கத்தில், தருண், ராபியா, அனன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் தருண் ஊரில் வேலை இல்லாமல் இருக்கிறார். இவருடைய அப்பா ஆர்.வி.பாண்டி போலீஸ் ஏட்டாக இருந்து வருகிறார். தருணுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. கனவில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்த கனவு தினமும் தொடர்கிறது. கனவில் காதலியுடன் பல இடங்களுக்கு செல்கிறார் தருண்.

    அந்த பெண் யார் என்று நிஜத்தில் தேட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் கனவில் சென்ற இடங்களை நிஜத்தில் பார்க்கிறார். மேலும் அந்த பெண் அருகில் எங்கையோதான் இருக்கிறார் என்று உணர்கிறார்.

    இந்நிலையில், தொழில் அதிபர் கேபிஜே-வின் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்கிறார் தருண். கனவில் வரும் காதலி ஒருநாள் ஒருவரை கொலை செய்ய தூண்டுகிறார். தன்னுடைய முதலாளிதான் கொலை செய்யும் நபர் என்று தருணுக்கு தெரியவருகிறது.



    இறுதியில் நாயகன் தருண் தன்னுடைய முதலாளியை கொலை செய்தாரா?, கனவில் வரும் நாயகியை நேரில் சந்தித்தரா? நாயகி தொழில் அதிபரை கொலை செய்ய சொல்ல காரணம் என்ன? என்பதை திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.

    படத்தின் நாயகன் தருண், நாயகி ராபியா ஆகியோர் தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் போலீஸ் ஏட்டாகவும் நடித்திருக்கிறார் ஆர்.வி.பாண்டி. தொழில் அதிபராக வரும் கேபிஜே, மற்றொரு நாயகியாக வரும் அனன்யா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    இயக்குனர் ஆர்.வி.பாண்டி, நடிகர்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லியிருக்கிறார். குறைந்த பட்ஜெட்டில் என்ன தரமுடியோ அதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். குழப்பம் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

    கோல்டு சந்துருவின் ஒளிப்பதிவும், ஏ.கே.ராம்ஜியின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘எங்கு சென்றாய் என் உயிரே’ பார்க்கலாம்.
    விஷால், ஜீவா, அதர்வா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீசில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சிறிய பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
    ஜெய் நடித்துள்ள நீயா 2 படம் மே 10-ந் தேதியான இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மே 24-ந் தேதிக்கு தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் 100 படத்திற்கும் பிரச்சனை வந்தது. நேற்று வெளியாக வேண்டிய அந்த படம் பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. 

    அதனை சரிசெய்து ஒருநாள் தள்ளி இன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், மீண்டும் படம் தள்ளிப்போயுள்ளது. அதேபோல் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீசும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜீவா நடித்துள்ள கீ படம் மட்டும் பிரச்சனைகளை கடந்து இன்று சற்று தாமதமாக ரிலீசானது. மேலும் காதல் முன்னேற்றக் கழகம், உண்மையின் வெளிச்சம், வேதமானவள், எங்கு சென்றாய் என் உயிரே உள்ளிட்ட படங்களும் இன்று வெளியாகிறது.



    இந்த நிலையில், திரையரங்குக்கு வந்து ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை பார்த்த எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி.பாண்டி தனது படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களை அழைத்துள்ளார். ஆனால் ரசிகர்கள் முன்வராத நிலையில், டிக்கெட் வாங்கி, அதனை குறைந்த விலைக்கு ரசிகர்களிடம் கொடுத்து படத்தை பார்க்க அனுப்பினார்.

    மேலும் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் காசுடன் 100 ரூபாய் தருவதாக கூறினார். உங்களை திருப்திபடுத்தும் வகையில் நகைச்சுவை, பாடல், கதை உங்களை கண்டிப்பாக கவரும். தயவுசெய்து என்னுடைய படத்தையும் பார்ப்பதற்கு திரையரங்குக்கு வாருங்கள். சிறிய படங்களையும் ஆதரியுங்கள் என்று ஆதங்கத்தோடு கூறினார். இதனை பார்த்து சிலர் அவரிடம் டிக்கெட் வாங்கி படம் பார்க்க சென்றனர்.

    இவ்வாறாக தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்பது பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குரலாக உள்ளது. எனவே சிறிய படங்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால் சிறிய படங்களுக்கும் வரவேற்பு பெறும்.

    ×