விம்பிள்டன் அரையிறுதி: NO-1 சபலென்காவிற்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்க வீராங்கனை..!

2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.முதல் செட் மற்றும் 3ஆவது செட்டை 6-4 என இழந்து தோல்வியடைந்தார்.
விம்பிள்டன் அரையிறுதி: NO-1 சபலென்காவிற்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்க வீராங்கனை..!
Published on

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா, 13ஆம் நிலை வீராங்கனையான அனிசிமோவோவை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-4 என அனிசிமோவா கைப்பற்றினார். 2ஆவது செட்டில் சபலென்கா பதிலடி கொடுத்தார். அவர் 2ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் இருவரும் மல்லு கட்டினர். ஆனால் அனிசிமோவை ஆட்டத்திற்கு சபலென்காவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 3ஆவது செட்டை 6-4 எனக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் 8ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக், தரநிலை பெறாத பென்சிக்கை எதிர்கொள்கிறார்.

சபலென்கா 4 முறையும், அனிசிமோவா 5 முறையும் டபுள் ஃபால்ட்ஸ் செய்தனர். சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 68 சதவீதமும், அனிசிமோவா 63 சதவீதமும் பாயின்ட்ஸ் பெற்றனர்.

2ஆவது சர்வீஸ் மூலம் அனிசிமோவா 69 பாயின்ட்ஸ், சபலென்கா 50 சதவீதம் பாயின்ட்ஸ் பெற்றனர். சபலென்காவின் பிரேக் பாயின்ட்ஸ் 3/14, அனிசிமோவாவின் பிரேக்ஸ் பாயின்ட்ஸ் 4/11 ஆகும். சபலென்கா 106 பாயின்ட்ஸ், அனிசிமோவா 108 பாயின்ட்ஸ் பெற்றனர்.

சபலென்கா 14 கேம்ஸ்களையும், அனிசிமோவா 16 கேம்ஸ்களையும் வென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com