

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷியாவின் ரூப்லெவ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 1-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மார்ட்டின் லாண்டலூசை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று இரவு நடைபெறும் அரையிறுதியில் சின்னர், ரஷியாவின் மெத்வதேவ் உடன் மோதுகிறார்.