Miami Open Tennis | அரையிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
சபலென்கா
சபலென்கா
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி சுற்று போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஹெய்லி பேப்டிஸ்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் நம்பர் 3 வீராங்கனையும், கஜகஸ்தானைச் சேர்ந்தவருமான எலினா ரிபாகினா 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ரிபாகினா உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com