இத்தாலி ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகிய ஸ்பெயின் வீராங்கனை

இத்தாலி ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகிய ஸ்பெயின் வீராங்கனை

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.இதில் காயம் காரணமாக ஸ்பெயினின் பவுலா படோசா விலகினார்.
Published on

ரோம்:

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில், நேற்று நடந்த 2வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோத இருந்தார்.

அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து திடீரென விலகினார்.

பவுலா படோசா தரவரிசையில் 10-வது இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com