

மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லிண்டா நோஸ்கோவா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் பவுலா படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.