

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி, செக் நாட்டு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய பிளிஸ்கோவா 6-3, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தத் தோல்வியின் மூலம் மரியா சக்காரி நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார்.