துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் பெகுலா, கோகோ காப்

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் பெகுலா, கோகோ காப்
Published on

துபாய்:

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்சின் அலெக்சாண்ட்ரா ஈலாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை அமெண்டா அனிசிமோவா உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com