

துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை கோகோ காப் 7-6 (15-13) என்ற செட் கணக்கில் வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை உக்ரைன் வீராங்கனை 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் அமெரிக்காவின் கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.