மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அலெக்சாண்டர் ஸ்வெரேவ் நீக்கம்

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அலெக்சாண்டர் ஸ்வெரேவ்
அலெக்சாண்டர் ஸ்வெரேவ்
Published on

மெக்சிகோ :

ஜெர்மனியை சேர்ந்தவரும், தரவரிசையில் நம்பர் 3 இடத்தைப் பிடித்தவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மெக்சிகோ ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஸ்வெரேவ் பிரேசிலின் மார்சிலோ மெலோவுடன் இணைந்து விளையாடினார். அதில் ஸ்வெரேவ் ஜோடி தோல்வி அடைந்தது.

டைபிரேக்கரின் போது ஸ்வெரேவ் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஸ்வெரேவ் நடுவர் காலை தாக்குவது போல் அவர் அமர்ந்திருந்த நாற்காலி மீது டென்னிஸ் பேட்டால் ஓங்கி அடித்தார். அவரது செயல் டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com