

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ரோனக் சவுகான், தைவானின் சூ லி யாங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய தைவான் வீரர் 21-17, 21-19 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ரோனக் சவுகான் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 21-15, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சென்னிடம் தோல்வி அடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.