Miami Open Tennis | இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா

சபலென்கா, எலினா ரிபாகினாவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தோற்கடித்தார்.
Miami Open Tennis | இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் சபலென்கா
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

மியாமி ஓபனின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனான சபலென்கா, எலினா ரிபாகினாவை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தோற்கடித்தார்.

இதைதொடர்ந்து, இறுதிப் போட்டியில் சபலென்கா, கோகோ காஃபை எதிர்கொள்கிறார்.

இந்த வெற்றியின் மூலம், இந்தியன் வெல்ஸ் தொடருக்குப் பிறகு சன்ஷைன் டபுள் பட்டத்தை வெல்லும் முயற்சியில் அவர் உறுதியாக உள்ளார்.

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com