

யு.எஸ்.ஓபன் பேட்மிண்டன் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்று இன்று அதிகாலை நடந்தது. இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பானின் யுடாய் ஒக்கிமோடோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கிடாம்பி ஸ்ரீகாந்த் 22-20 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக ஜப்பான் வீரர் 2வது செட்டை 21-15 என கைபற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கிடாம்பி 21-19 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 21-15, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் லைன் கிறிஸ்டோபர்சென்னிடம் தோல்வி அடைந்தார்.