IPL 2026 | ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ. 15,300 கோடிக்கு வாங்கிய அமெரிக்க தொழில் அதிபர் கல் சொமானி

1.63 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அமெரிக்க தொழிலதிபர் கல் சொமானியின் தலைமையிலான கூட்டமைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கியுள்ளது
IPL 2026 | ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரூ. 15,300 கோடிக்கு வாங்கிய அமெரிக்க தொழில் அதிபர் கல் சொமானி
Published on

ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் 10 அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த அணியின் உரிமையாளர் அணியை விற்கப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் அமெரிக்க தொழில் அதிபரான கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார். 1.63 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய பண மதிப்பில் சுமார் 15281.22 கோடி) அணியை வாங்கியுள்ளார்.

அந்த கூட்டமைப்பில் வால்மார்ட்டின் ராப் வால்டன், போர்டு நிறுவனத்தின் ஹாம்ப் குடும்பத்தினர் இணைந்துள்ளனர்.

2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், உரிமையாளர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com