நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்: வங்கதேசம் முடிவு குறித்து ஹர்பஜன் கருத்து

வங்கதேசத்தில் நடந்த எதுவாக இருந்தாலும், அவை தவறானவை.அவர்களின் வேண்டுகோள் மீது ஐசிசிஐ முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.
நாங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்: வங்கதேசம் முடிவு குறித்து ஹர்பஜன் கருத்து
Published on

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெற்றதால், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முஸ்தாபிசுர் ரகுமானை ஏலம் எடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து அமைப்புகள் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக் கானை துரோகி என விமர்சித்தன. இதனால் அவரை விடுவிக்க வேண்டும் என கொல்கத்தா அணியிடம் பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதனடிப்படையில் கொல்கத்தா அணி அவரை விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் விளையாடும் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் போர்டு ஐசிசி-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகள் வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் வங்கதேசம் முடிவு குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் "கடந்த சில நாட்களாக நடைபெற்ற பல்வேறு விசயங்கள் காரணமாக வங்கதேச அணி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க விரும்பவில்லை.

வங்கதேசத்தில் நடந்த எதுவாக இருந்தாலும், அவை தவறானவை. அவர்களின் வேண்டுகோள் மீது ஐசிசிஐ முடிவு எடுக்க வேண்டியது அவசியம். நாங்கள் எல்லோரையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். ஆனால், ஆனால் வருவது அல்லது வராதது அவர்களை தேர்வு" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com