பல இடங்களில் அணியை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது- தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து

இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது.இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.
பல இடங்களில் அணியை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது- தோல்வி குறித்து சுப்மன் கில் கருத்து
Published on

இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு முறை வென்று தொடரில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய இந்தியா 296 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த போட்டியில் எங்களது ஆட்டம் சற்று ஏமாற்றம் தருகிறது. தோல்வியில் இருந்து பாடங்கள் கற்று, பல இடங்களில் அணியை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பாசிட்டிவ் என பார்த்தால், கோலியின் பேட்டிங் எப்போதுமே அணிக்கு பலம்தான். 8வதாக களமிறங்கி ஹர்ஷித் ராணா சிறப்பாக பேட் செய்தார். இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள்.

என சுப்மன் கில் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com