

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹைதராபாத் திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தெலங்கானா தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தெலங்கானா அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.அப்போது சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன், திலக் வர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
திலக் வர்மாவின் சாதனைகள், தெலங்கானா முழுவதிலும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களை, விளையாட்டுத் துறையில் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும், சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் ஊக்குவிக்கும் என்று அசாருதீன் கூறினார்.