வெற்றியுடன் வெளியேற ஆஸ்திரேலியா ஆர்வம்- கடைசி போட்டியில் ஓமனுடன் நாளை மோதல்

ஆஸ்திரேலியா ஏற்கனவே ‘சூப்பர் 8’ சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. ஓமன் அணி தான் 3 மோதிய 3 ஆட்டங்களிலும் தோற்றது.
வெற்றியுடன் வெளியேற ஆஸ்திரேலியா ஆர்வம்- கடைசி போட்டியில் ஓமனுடன் நாளை மோதல்
Published on

பல்லேகலே:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'லீக்' ஆட்டங்கள் நாளையுடன் முடிவடைகிறது. இந்தியா, இலங்கையில் கடந்த 7-ந்தேதி தொடங்கிய இந்த தொடரில் தினசரி 3 ஆட்டங்கள் நடைபெற்று வந்தது. நாளை ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே நடக்கிறது. பல்லேகலேவில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-ஓமன் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா ஏற்கனவே 'சூப்பர் 8' சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. மிட்செல் மார்ஷ் தலைமையிலான அந்த அணி வெற்றியுடன் வெளியேறும் ஆர்வத்தில் உள்ளது.

ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை (67 ரன்) மட்டும் வீழ்த்தியது. ஜிம்பாப்வேயிடம் 23 ரன்னிலும், இலங்கையிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

ஓமன் அணி தான் 3 மோதிய 3 ஆட்டங்களிலும் தோற்றது. ஜிம்பாப்வேயிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும், இலங்கையிடம் 105 ரன் வித்தியாசத்திலும், அயர்லாந்திடம் 96 ரன் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து ஓமன் முதல் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com