சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர் ஓய்வு

ராஸ்ஸி வான் டெர் டுசென் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்பிரிக்கா வீரர் ஓய்வு
Published on

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ராஸ்ஸி வான் டெர் டுசென் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அண்மையில் வெளியிட்ட 2026-27 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் வான் டெர் டுசென் பெயர் இடம்பெறவில்லை. இதுவே அவர் இந்தத் திடீர் முடிவை எடுக்க முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது.

37 வயதான வான் டெர் டுசன், தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு வலுவான தூணாக விளங்கியவர். அவரது இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் 50-க்கும் அதிகமான சராசரியைக் கொண்டுள்ள அவர், மிகக் குறுகிய காலத்திலேயே தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பேட்டர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

இளைய தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கோடும், தனது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடவும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், அவர் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள டி20 லீக் தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com