இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி: நேபாள கேப்டன் சொன்னது என்ன?

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.அந்த அணியின் பெத்தேல், ஹாரி புரூக் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி: நேபாள கேப்டன் சொன்னது என்ன?
Published on

மும்பை:

டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.

அடுத்து ஆடிய நேபாளம் இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் அணி 4 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.

நேபாள அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு இங்கிலாந்து கேப்டன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு நேபாள அணி கேப்டன் ரோகித் பவுடல் பேசியதாவது:

எங்களது வீரர்கள் தங்களது முழு முயற்சியையும் களத்தில் காட்டினர். அவர்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

நாங்கள் உலகக் கோப்பைக்கு நம்பிக்கையுடன் தான் வந்துள்ளோம். வெறுமனே பங்கேற்றுவிட்டு செல்வதற்காக இங்கு வரவில்லை.

முயற்சி என வரும்போது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் 100 சதவீத பங்களிப்பை வழங்கினோம்.

கடைசி ஓவரை சாம் கர்ரன் உண்மையிலேயே சிறப்பாக வீசினார்.

எங்களை நினைத்து நேபாள ரசிகர்கள் பெருமைப்படுவார்கள். நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதேபோல், மற்ற அணிகளும் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்க மாட்டார்கள். இந்த ஆட்டம் உணர்த்திய செய்தி இது தான் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com