வார்னேவை பார்த்த உத்வேகம்தான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த காரணம் என்கிறார் குல்தீப் யாதவ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசுவதற்கு உத்வேகமாக அமைந்ததே வார்னேதான் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். #IPL2018
வார்னேவை பார்த்த உத்வேகம்தான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த காரணம் என்கிறார் குல்தீப் யாதவ்
Published on

இவர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்பு 12 போட்டிகளில் 9 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.

தான் சிறப்பாக பந்து வீசியதற்கு ஷேன் வார்னே அங்கிருந்ததுதான் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘நான் எப்போதுமே ஷேன் வார்னேயின் மிகப்பெரிய ரசிகன். அவர்தான் என்னுடைய முன்னுதாரணம். அவர் முன்னாள் விளையாடும்போது எப்போதுமே, மாறுபட்ட உத்வேகத்தை பெறுவேன். அவர் முன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புவேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com