

ஐபிஎல் 2026 சீசனில் கவுகாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 127 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாட, முதல் ஓவரில் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்தார். இதை கார்த்திக் சர்மா பிடிக்க தவறினார். அத்துடன் அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது.
அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யவன்ஷி 6-வது ஓவரின் 5-வது பந்த சிக்சருக்கு தூக்கி 15 பந்தில் அரைசதம் விளாசினார். 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 15 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் அணிக்காக ஜெய்ஸ்வால் 13 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். அதன்பின் அந்த அணிக்கான அதிவேக அரைசதம் இதுவாகும்.