

ஐ.பி.எல். சீசனில் 9-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக இன்று ரஷித் கான் செயல்படுகிறார்.
குஜராத் அணி முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக வெற்றி பெற்றிருந்தது.