

ஐ.பி.எல். தொடரின் 8வது லீக் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா 35 ரன்னும், நமன் தீர் 28 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்க உள்ளது.