IPL 2026 | வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்... தோல்விக்கு பிறகு மனம் திறந்து பேசிய ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை குறை கூற மாட்டேன் என்றார்.
IPL 2026 | வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்... தோல்விக்கு பிறகு மனம் திறந்து பேசிய ஹர்திக் பாண்டியா
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து நல்ல ஃபார்மில் காணப்படவில்லை. நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய போதிலும் மும்பை அணி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது.

நேற்றிரவு நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 243 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் மும்பை அணி நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கியது.

18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர் தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை குறை கூற மாட்டேன் என்றார்.

இது குறித்து பேசிய அவர், "பனிப்பொழிவு ஒரு பெரிய பங்கு வகித்ததாக நான் நினைக்கவில்லை. அவர்கள் சில நல்ல ஷாட்களை ஆடினார்கள், நாங்கள் மோசமாக பந்து வீசினோம். இன்று மைதானத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.

244 ரன்கள். அதைத் தடுப்பார்கள் என்று என் பந்துவீச்சாளர்களை நான் நம்புவேன். ஆனால் எங்களால் அதைச் செயல்படுத்த முடியவில்லை. கடைசி மூன்று பந்துகளைத் தவிர பந்துவீசுவதை ரசித்தேன், ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.

இது அப்படியான ஒரு சீசனாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்போது, ​​அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். நீங்கள் அப்படி செய்யாவிட்டால், அது உங்களை பாதிக்கும். இந்த சீசனில், எங்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. நான் என் பந்துவீச்சாளர்களைக் குறை கூற மாட்டேன். ஒரு ஒட்டுமொத்தமாக, MI அணி வழக்கமாக செய்வதை எங்களால் செய்ய முடியவில்லை," என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com