IPL 2026 | மழையால் தடைப்பட்ட KKRvsPBKS போட்டி - ரசிகர்கள் Upset

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
IPL 2026 | மழையால் தடைப்பட்ட KKRvsPBKS போட்டி - ரசிகர்கள் Upset
Published on

2026 ஐ.பி.எல். தொடரில் 12-ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

போட்டி தொடங்கியதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கே.கே.ஆர். அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான ஃபின் ஆலென் 6 ரன்களில் பார்ட்லெட் வீசிய பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் பார்ட்லெட் ஓவரிலேயே 4 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆட்டத்தின் 3 ஓவரின் போது மழை குறுக்கிட ஆரம்பித்தது. எனினும், ஓவரின் 4 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழை தீவிரமானது. இதனால் போட்டியை தொடர முடியாத சூழலில் தடைப்பட்டது.

முதலில் பேட்டிங் தொடங்கிய கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன்களை சேர்த்துள்ள சூழ்லையில், போட்டி மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com