

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் ரபாடா மற்றும் சுப்மன் கில் அபாரமாக ஆடினர்.
போட்டிக்கு பின் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹாானே தோல்விக்கு எந்த காரணமும் ல்ல முடியாது என்றார். மேலும், அவர் குஜராத் அணியின் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சனும் சிறப்பாக ஆடியதாக பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் நாங்கள் ஆட்டத்தைத் தொடங்கிய விதமும், கிரீன் தொடங்கிய விதமும் அற்புதமாக இருந்தது. 147 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து 180 ரன்கள் எடுப்பது சற்று கடினமாக இருந்தது. ஆனால், எங்கள் பந்துவீச்சாளர்கள் அனைவரும் பந்துவீசிய விதத்திற்குப் பாராட்டுக்கள். அவர்கள் ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றனர்.
கில் மிக நன்றாக பேட் செய்தார். லேசான பனியும் இருந்தது, ஆனால் அதற்கு எந்த காரணமும் சொல்ல முடியாது. சாய் சுதர்சன், சுப்மன் கில் மிக நன்றாக பேட் செய்தனர். நான் நேர்மறையான விஷயங்களை பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். நாங்கள் மூன்று நெருக்கமான ஆட்டங்களில் விளையாடினோம்.
கிரீன் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார், அதனால்தான் அவர் இன்று களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டிருந்தார், அதனால்தான் அவர் பந்துவீசவில்லை. எல்லாம் அந்தத் தருணத்தில் இருப்பதைப் பற்றியதுதான். விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாதபோது, நீங்கள் பல விஷயங்களைப் பற்றி யோசிப்பீர்கள்," என்றார்.