ஐ.பி.எல். 2024: பூரன் அதிரடியால் 161 ரன்களை குவித்தது லக்னோ

கேப்டன் கே.எல். ராகுல் 39 ரன்களை குவித்தார். நிக்கோலஸ் பூரன் சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்தார்.
ஐ.பி.எல். 2024: பூரன் அதிரடியால் 161 ரன்களை குவித்தது லக்னோ
Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் 10 ரன்களில் ஆட்டமிழக்க, இவருடன் களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் 27 பந்துகளில் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்களையும், ஆயுஷ் பதோனி 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். போட்டி முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை குவித்தது. கடைசி ஓவர்களில் நிக்கோலஸ் பூரன் சிறப்பாக ஆடி 45 ரன்களை குவித்தார்.

கொல்கத்தா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் வைபவ் அரோரா, சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி, ஆண்ட்ரெ ரசல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com