U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 55 பந்தில் சதம் விளாசிய சூர்யவன்ஷி

32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம்55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார்.
U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: 55 பந்தில் சதம் விளாசிய சூர்யவன்ஷி
Published on

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஆரோன் ஜார்ஜ், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களம் இறங்கினர். ஜார்ஜ் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

அடுத்து வைபவ் சூர்யவன்ஷி உடன் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சூர்யவன்ஷி 32 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆயுஷ் மாத்ரே 50 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யவன்ஷியுடன் வேதாந்த் திரிவேதி ஜோடி சேர்ந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 55 பந்தில் தலா 8 பவுண்டரி மற்றும் சிக்சர்களுடன் சதம் அடித்தார்.

சதம் அடித்த அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தியா 22.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com