2031 உலக கோப்பைக்கு முன்பாக... வங்கதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்த ஐசிசி

டி20 உலக கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது வங்கதேசத்திற்கு அபராதமோ, நிர்வாகத் தடையோ விதிக்கப்படாது
2031 உலக கோப்பைக்கு முன்பாக... வங்கதேசத்திற்கு வாக்குறுதி கொடுத்த ஐசிசி
Published on

வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

இந்நிலையில், "டி20 உலக கோப்பையில் வங்கதேச அணி இல்லாதது வருந்தத்தக்கது என்று ஐசிசி தலைமை நிர்வாகி சஞ்ஜோக் குப்தா தெரிவித்துள்ளார்.

மேலும், டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காததற்கு வங்கதேசத்திற்கு அபராதமோ, நிர்வாகத் தடையோ விதிக்கப்படாது என்றும் 2031 உலக கோப்பைக்கு முன்பாக ICC தொடர் ஒன்றை வங்கதேசத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சஞ்ஜோக் குப்தா தெரிவித்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com