லார்ட்ஸ் டெஸ்ட் முதல் நாள்: மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 83/2

ஜோ ரூட் (24), போப் (12) களத்தில் உள்ளனர்.நிதிஷ் ரெட்டி 2 விக்கெட் வீழ்த்தினார்.
லார்ட்ஸ் டெஸ்ட் முதல் நாள்: மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 83/2
Published on

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.

கிராவ்லி, டக்கட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பும்ரா தொடக்க ஓவரை வீசினார். ஆகாஷ் தீப் அவருடன் புதிய பந்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் அபாரமாக பந்து வீசினர். பந்து நல்லவிதமாக ஸ்விங் ஆனது. ஆனால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதனால் 14ஆவது ஓவரிலேயே நிதிஷ் குமாரை பந்து வீச அழைத்தார் சுப்மன் கில்.

2ஆவது பந்தில் டக்கட் பவுண்டரி அடித்தார். ஆனால், 3ஆவது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 23 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து ஆலி போப் களம் இறங்கினார். போப் முதல் பந்திலேயே அவட்டாக வேண்டியது, கடினமான கேட்சை சுப்மன் கில் தவறவிட்டார்.

அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தை கிராவ்லி எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பை ஒட்டி வீசிய பந்து பேட்டில் உரசி விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறியது. கிராவ்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள வீழ்த்தி அசத்தினார்.

3ஆவது விக்கெட்டுக்கு ஆலி போப் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக்கொண்டது. இதனால் இங்கிலாந்து முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 25 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com