

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இந்த தொடரின் போது சர்ச்சையில் சிக்கினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அவரது முகத்துக்கு முன்னாள் Flying kiss கொடுப்பார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை வைத்து ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலை கிண்டலடிப்பார். இது தொடர்பான வீடியோ கூட டிரெண்டானது. இப்படி இந்த ஐபிஎல் தொடரில் பேசுபொருளான Flying kiss குறித்து ஹர்ஷித் ராணா வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அப்போதைய நேரத்திற்கு Flying kiss கொடுத்து அந்த தருணத்தை கொண்டாட வேண்டும் என தோன்றியது. எந்த போட்டிகளிலும், வீரருக்கு எதிராகவும் இப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என நான் திட்டமிடவில்லை. கோலியின் மீதுள்ள மரியாதை காரணமாகவே அவரின் விக்கெட்டை வீழ்த்தியபோதும் கொண்டாட்டத்தை தவிர்த்தேன்.
இவ்வாறு ராணா கூறினார்.