லக்னோ அணிக்கு மாறிய KKR அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்

பரத் அருணின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
லக்னோ அணிக்கு மாறிய KKR அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்
Published on

ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தவர் பரத் அருண். அவர் 2022-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.

பரத் அருணின் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. இவர் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் லக்னோ அணிக்கு 62 வயதான பரத் அருண், 2 ஆண்டுகள் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து செயல்படுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பரத் அருண் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com