டி20-யில் அதிகமுறை டக்: அப்ரிடியை முந்தினார் பாபர் அசாம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாபர் அசாம் டக்அவுட் ஆனார்.இது அவரின் 9வது டி20 டக்அவுட் ஆகும்.
டி20-யில் அதிகமுறை டக்: அப்ரிடியை முந்தினார் பாபர் அசாம்
Published on

பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. சாஹிப்சதா பர்ஹான் (16) ஆட்டமிழந்ததும், பாபர் அசாம் களம் இறங்கினர். இவர் 3 பந்துகளை சந்தித்த நிலையில் எவன்ஸ் பந்தில் டக்அவுட் ஆனார்.

டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் 9ஆவது டக் இதுவாகும். இதன் மூலம் அதிக முறை டக்அவுட் ஆன பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com