ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து மணல் சிற்பம் உருவாக்கம்

பூரி கடற்கரையில் பார்வையாளர்களை கவரும் வகையில் மணல் சிற்பம் வடிவமைப்பு.பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இதை உருவாக்கி உள்ளார்.
மணல் சிற்பம்
மணல் சிற்பம்
Published on

பூரி:

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பண்ட், நேற்று காலை டெல்லி புறநகர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ரிஷப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவாக குணமடைய வாழ்த்து தெரிவித்து ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இதை உருவாக்கி உள்ளார்.

கிரிக்கெட் பேட்டில் ரிஷப் பண்ட் உருவம் மணலால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் குணமடையுங்கள் ரிஷப் பண்ட் என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பட்நாயக் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com