புரோ கபடி லீக்: முதல் அணியாக வெளியேறியது பெங்கால் வாரியர்ஸ்

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.இன்று நடந்த ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது.
புரோ கபடி லீக்: முதல் அணியாக வெளியேறியது பெங்கால் வாரியர்ஸ்
Published on

புதுடெல்லி:

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நான்காவது கட்டமாக தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

இன்று நடந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 54-24 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.

பெங்கால் வாரியர்ஸ் அணி 18 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றது. 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம் நடப்பு தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது.

மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 45-34 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com