

பராபவ ஆண்டு, சித்திரை-21 (திங்கள்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை மறுநாள் விடியற்காலை 4.41 வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : அனுஷம் காலை 9.29 வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
அக்னி நட்சத்திர தோஷம் ஆரம்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மலைக்கு புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சனசேவை.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள்சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
மேஷம் - நிம்மதி
ரிஷபம் - நிறைவு
மிதுனம் - பரிசு
கடகம் - பணிவு
சிம்மம் - தாமதம்
கன்னி - களிப்பு
துலாம் - கடமை
விருச்சிகம் - சுபம்
தனுசு - அமைதி
மகரம் - ஆர்வம்
கும்பம் - இரக்கம்
மீனம் - இன்பம்