

பராபவ ஆண்டு, சித்திரை-20 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை பின்னிரவு 2.39 வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : விசாகம் காலை 6.59 வரை பிறகு அனுஷம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் சந்திர பிரபையில் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகமாரியம்மன், காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் மோகனாவதாரம். வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருவீதியுலா. சோழ சிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் விடாயாற்று. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் கோவில்களில் திருமஞ்சன சேவை.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும். ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.
மேஷம் - சாந்தம்
ரிஷபம் - சாதனை
மிதுனம் - நலம்
கடகம் - நன்மை
சிம்மம் - சிந்தனை
கன்னி - பக்தி
துலாம் - பணிவு
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - ஆக்கம்
மகரம் - ஆதரவு
கும்பம் - சுபம்
மீனம் - கடமை