

பராபவ ஆண்டு சித்திரை 1 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி இரவு 9.55 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : சதயம் நண்பகல் 1.42 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
பராபவ விஷூ தமிழ் புத்தாண்டு வருடப் பிறப்பு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் ரதோற்சவம், திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஷண்முகரண்ணாபிஷேகம், உதகமண்டலம் ஸ்ரீ மாரியம்மன் ரதோற்சவம். மாவூற்று ஸ்ரீ வேலப்பர் பெருவிழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருநெல்வேலி சமீபம் 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப்பெருமான் பவனி.
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-விருத்தி
மிதுனம்-நலம்
கடகம்-ஜெயம்
சிம்மம்-சாந்தம்
கன்னி-இரக்கம்
துலாம்-லாபம்
விருச்சிகம்-கடமை
தனுசு-வரவு
மகரம்-செலவு
கும்பம்-தனம்
மீனம்-நலம்