அருணகிரிநாதருக்காக நேரில் தோன்றிய முருகப்பெருமான்

திருவண்ணாமலை தலம் முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக திகழ்வதற்கான காரணத்தையும் அதற்காக முருகப்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
அருணகிரிநாதருக்காக நேரில் தோன்றிய முருகப்பெருமான்
Published on

அருணகிரிநாதர் முருகப்பெருமானின் தீவிர பக்தர். அரசவைப்புலவராக இருந்த சம்பந்தன் காளி தேவியிடம் வரங்கள் பல பெற்றவர். அருணகிரிநாதரின் புகழில் பொறாமையுற்ற சம்பந்தன் தனக்கும் அருணகிரிநாதருக்குமிடைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யுமாறு திருவண்ணாமலை மன்னரைக் கேட்டுக்கொண்டார். அதாவது இருவரில் யார் தங்களுடைய கடவுளை நேரில் தோன்றச் செய்விப்பது என்பது தான் போட்டி.

இப்போட்டியில் சம்பந்தனால் தனது தெய்வமான காளியைத் தோன்றச் செய்ய இயலவில்லை. ஆனால் அருணகிரிநாதர் வேண்டுதலின் பேரில் முருகப்பெருமான் நேரில் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்குப்பின் திருவண்ணாமலை தலம் முருகபக்தர்கள் யாத்திரை செல்லும் புகழ் மிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது..

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com