கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

கொடியேற்று நிகழ்ச்சியையொட்டி கோவிலில் முல்லைவனநாதர், கர்ப்பரட்சாம்பிகை சன்னதிகளில் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பல்லக்கில் சாமி வீதி உலா நடந்தது.

விழாவையொட்டி சாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) சேஷ வாகனத்திலும், நாளை (வெள்ளிக்கிழமை) ஓலை சப்பரத்திலும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவமும், விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com