மங்கல வாழ்க்கை சிறப்பாக அமைய வழிபட வேண்டிய கோவில்

‘என்றும் பதினாறு’ என்ற வரம் பெற்ற மார்க்கண்டேயன் உயிரைக்காக்க இறைவன் திருவிளையாடல் நடத்திய தலம் இது.இத்தகைய பெருமை பெற்ற திருத்தலத்தில் மணி விழா செய்து கொண்டால் தொடர்ந்து மங்கல விழாக்கள் வாழ்வில் வந்து சேரும்.
திருக்கடவூர் கோவில்
திருக்கடவூர் கோவில்
Published on

ஒவ்வொருவருக்கும் அறுபது வயது பூர்த்தியாகும் பொழுது மணிவிழா நடத்தி மக்கள் செல்வங்களுடன் மகிழ்ந்திருப்பது வழக்கம். அந்த அறுபதாம் ஆண்டு விழா திருக்கடவூரில் செய்து கொண்டால் ஆயுள் நீடிப்பு உண்டு என்பர்.

‘கடம்’ என்றால் ‘குடம்’ என்று பொருள். அமிர்த குடத்தை அருளியவர் அமிர்தகடேஸ்வரர். அம்பிகை அபிராமி அம்மன் ஆவார்.

‘என்றும் பதினாறு’ என்ற வரம் பெற்ற மார்க்கண்டேயன் உயிரைக்காக்க இறைவன் திருவிளையாடல் நடத்திய தலம் இது. எனவே, ‘விதியை மாற்றிய தலம்’ என்று இதை கூறலாம்.

அபிராமி பட்டருக்காக அமாவாசை அன்று முழுநிலவு வந்ததும் இங்குதான். திதியும் மாறிய தலம் இது. இத்தகைய பெருமை பெற்ற திருத்தலத்தில் மணி விழா செய்து கொண்டால் தொடர்ந்து மங்கல விழாக்கள் வாழ்வில் வந்து சேரும். மகிழ்ச்சியும் பெருகும்.

சிவல்புரி சிங்காரம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com