ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சகஸ்ரதீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது.
Published on

உலக நன்மைக்காக, ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும்.

இந்தாண்டிற்கான கார்த்திகை மாத சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நேற்று தாயார் சன்னதியில் நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) சக்கரத்தாழ்வார் சன்னதியிலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) பெருமாள் சன்னதியிலும் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற உள்ளது. 

இந்த சகஸ்ரதீப கூட்டு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றிவழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com