

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 12-வது நாளான நேற்று இரவு 10 மணியளவில் பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.