சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
ஸௌந்தர்ய லஹரி
ஸௌந்தர்ய லஹரி
Published on

அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம்ரேடனஜபா

ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா

யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ

ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவபுஷா

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகம்

பொதுப் பொருள்:

அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com