

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள சிங்காரம் தெருவில் சுந்தரமாகாளி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் 31-ம் ஆண்டு பங்குனி உற்சவத்தையொட்டி நேற்று கோவிலில் இருந்து சுந்தர மாகாளியம்மன், பச்சைமா காளியம்மன், மஞ்ச மாகாளியம்மன், சந்தன மாரியம்மன், சிவசக்தி காளியம்மன், நவசக்தி காளியம்மன், தேவி கருமாரியம்மன், தேவி செந்தூரம்மன் மற்றும் தேவி நீலாம்பரி உள்ளிட்ட நவகாளிகள் திருநடனத்துடன் வீதி உலா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.