புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் இன்று தேர்ப்பவனி

புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயத்தில் இன்று (புதன்கிழமை) திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.
குழந்தை இயேசு
குழந்தை இயேசு
Published on

கண்டன்விளை காரங்காடு பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. காரங்காடு பங்கு மிகப்பெரியதாக இருந்தமையால் புதிதாக இன்னும் ஓர் ஆலயம் கட்ட வேண்டுமென விரும்பிய அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா கண்டன்விளையில் இடம் தேர்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

1923-ஆம் ஆண்டு ரோமை நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்ட விழாவில் கலந்து கொண்ட அன்றைய ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப்பப்படும் ஆலயம் சிறுமலரின் முதல் ஆலயமாக அமையும் என ஆயர் பேரவையில் அறிவித்தது கண்டன்விளைப் பங்கை உலகறியச் செய்தது. இந்த ஆலயம் 7-4-1924 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆலயம் 7-4-1929 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா 2023-ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

இன்று (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறும்.

நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி பாளைமறைமாவட்ட பணிநிறைவு ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, காலை 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வெ.சகாய ஜஸ்டஸ், இணை பங்குதந்தை ஸ்டாலின், துணைத்தலைவர் பி.எம். ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலாளர் லல்லி மலர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com