கணவன் மனைவி சண்டை, திருமண தடை நீக்கும் பரிகாரம்

இந்திராணி தாயார் சிறப்புமிக்கவள்.காயத்ரி மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்ய வேண்டும்.
கணவன் மனைவி சண்டை, திருமண தடை நீக்கும் பரிகாரம்
Published on

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றது. அந்த பிரச்சனைகளில் நாம் முதல் காரணமாக எடுத்துக் கொண்டாள் இருவருக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடாக தான் இருக்கும். ஆனால் இரண்டாவது காரணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக விளங்கும் தாம்பத்திய வாழ்க்கையில் சரி இல்லாத போது தான். கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஒருவர் மீது ஒருவர் கோபம் எரிச்சல் போன்ற மனநிலை உண்டாகும். இது திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி இடையில் இருக்கும் தாம்பத்திய வாழ்க்கை மேலும் பாதிக்கும். அதனால் இந்த

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரத்தை உச்சரித்து இந்திராணி தாயாரை மனதார வேண்டி பூஜை செய்து வந்தால் திருமணம் தடைப்பட்டு வந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு கூட விரைவில் திருமணம் நடக்கும். ஏன் கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையின்மையால் தினசரி வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் ஒற்றுமை உண்டாகும்.

இந்திராணி தாயாரை பூஜை செய்து வந்தால் தன்னை வேண்டி பூஜை வழிபாடுகள் செய்பவர்களின் உயிரை காப்பதிலும் மற்றும் முக்கியமாக அவர்களுக்கு ஏற்ற நல்ல வாழ்க்கை துணையே அமைத்துத் தந்து அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை முதல் குடும்ப வாழ்க்கை வரை அனைத்தும் சீரும் சிறப்புமாக தரக்கூடியதில் இந்த இந்திராணி தாயார் சிறப்புமிக்கவள். இப்படி இந்திராணி தாயாரை பூஜை செய்து வந்தாள் திருமணம் ஆகாத பெண்களுக்கு குணத்தில் நல்ல ஆண்மகனும், திருமண ஆகாத ஆண்களுக்கும் குணத்தில் நல்ல பெண்களும் இடையில் திருமணம் வெகு சீக்கிரமாக நடக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com